திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோவிலுக்கு அடிவாரத்தில் இருந்து பக்தர்கள் சென்றுவர படிப்பாதை மற்றும் யானைப்பாதை ஆகியவை முக்கிய வழிப்பாதைகளாக உள்ளது. இவை மட்டுமில்லாமல் விரைவாக செல்லவும், மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோர்கள் எளிதாக சென்று வரும் வகையிலும் ரோப்கார், மின்இழுவை ரெயில் ஆகிய சேவைகளும் உள்ளன. விரைவாகவும், இயற்கை அழகை ரசித்தபடியும் செல்ல முடிவதால் பெரும்பாலானோரின் முதல் தேர்வாக ரோப்கார்ஷசேவை இப்போது வரையிலும் இருக்கிறது. இந்த ரோப்கார் சேவைக்காக, அடிவாரம் கிழக்கு கிரிவீதி மற்றும் மலைக்கோவிலில் நிலையங்கள் உள்ளன. காற்றின் வேகத்தை பொறுத்து ரோப்கார் சேவை இயக்கப்பட்டு வருகிறது. காற்று அதிகமாக வீசும்போது அதன் சேவை நிறுத்தப்படும். இதேபோல் தினமும் ஒரு மணி நேரமும், மாதத்துக்கு ஒரு நாளும் பராமரிப்பு பணி நடைபெறும். அப்போது ரோப்கார் சேவை நிறுத்தப்படுவது வழக்கம். அதன்படி பழனி முருகன் கோவில் ரோப்கார் நிலையத்தில் இன்று மாதாந்திர பராமரிப்பு பணி நடந்ததால் ரோப்கார் சேவை நிறுத்தப்பட்டது. எனவே மின்இழுவை ரெயில் மற்றும் படிப்பாதையை பயன்படுத்தி பக்தர்கள் மலைக்கோவிலுக்கு சென்று தரிசனம் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
பழநி முருகப்பெருமான் கோவிலில் நிறுத்தப்பட்ட ரோப்கார் சேவை!
-
By mukesh

Related Content
பிரதமர் நரேந்திர மோடிக்கு அமைதிக்கான நோபல் பரிசு
By
daniel
December 13, 2025
தூய்மைப்பணியாளர்களுக்கு ஆதரவாக திலகபாமா!
By
daniel
November 20, 2025
காஸாவிற்கு ஆதரவாகத் தீர்மானம் - மு.க.ஸ்டாலின்
By
daniel
October 8, 2025
12ந் தேதி மக்கள் சந்திப்பு யாத்திரையைத் தொடங்கும் நயினார் நாகேந்திரன்!
By
daniel
October 6, 2025
தமிழ்நாடு நாட்டிற்கே வழிகாட்டும் - முதலமைச்சர் ஸ்டாலின்
By
daniel
October 4, 2025
ஸ்டாலின் தன்னைப் பார்த்தே கேள்விகள் கேட்க வேண்டும் - இபிஎஸ்
By
daniel
October 3, 2025