சாலையோர மரங்களில் விளம்பர பலகைகள் வைத்தவர்கள் மீது நடவடிக்கை தேவை – உயர்நீதிமன்றம்

சென்னையில் சாலையோர மரங்களில் விளம்பர பலகைகள் வைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நடவடிக்கை எடுத்தது தொடர்பான அறிக்கை தாக்கல் செய்ய சென்னை மாநகராட்சிக்கு உயர்நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.

ஆணி அடித்து விளம்பர பலகைகள் வைக்கப்படுவதால், மரத்தின் வளர்ச்சி பாதிக்கப்படுகிறது என்று மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், சென்னையில் சாலையோர மரங்களில் விளம்பர பலகைகள் வைத்தவர்கள் தொடர்பான அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது.

Exit mobile version