ஒரே நாளில் கர்ப்பமாகி குழந்தை பெற்றெடுத்த 25 வயது இளம் பெண் : அவர் சொன்ன ஆச்சரிய காரணம்!!

இந்தோனேஷியாவில் இளம் பெண் ஒருவர் கருவுற்ற இரண்டு நாட்களில் குழந்தை பெற்ற நிலையில், நான் கர்ப்பம் ஆனதற்கு காற்று தான் காரணம் என்ற விசித்திர காரணத்தை கூறியுள்ளார்.

இந்தோனேஷியாவின் சியாஜூர் என்னும் நகரில் கடந்த வாரம் சிட்டி ஜைனா என்ற 25 வயது மதிக்கத்தக்க பெண், தான் கர்ப்பமானதை உணர்ந்த சில மணி நேரத்திலே குழந்தை பெற்றெடுத்துள்ளார்.

இது குறித்து அவர் உள்ளூர் ஊடகத்திற்கு அளித்த பேட்டியில், அன்று தனது வீடு முழுவதும் காற்று பயங்கரமாக வீசியதாகவும், அதன் பின் அடுத்து 15 நிமிடங்களுக்கு பிறகு அவரது வயிற்றில் வலியை உணர்ந்தாக கூறிய அவர், அடுத்த சில நிமிடங்களிலேயே அவரது வயிறானது பெரிதாக வளர்வதை கண்டதாக கூறியுள்ளார்.

இதையடுத்து உடனடியாக அருகில் இருக்கும் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில், அங்கு குழந்தை பெற்றெடுத்துள்ளார். இவருக்கு அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது.

பிற்பகல் வேளையின் தொழுகைக்கு பிறகு நான் படுத்து தூங்கிக் கொண்டிருந்தேன். அப்போது எனது பிறப்பு உறுப்பிற்குள் காற்று புகுவதை நான் உணர்ந்தேன், அதுவே என் கர்ப்பத்திற்கு காரணம் என்பது போல் கூறியுள்ளார். இவரின் இந்த விளக்கம் சமூகவலைத்தளங்களில் தீவிரமாக வைரலாகி வருகிறது.

Exit mobile version