சிவகாசியில் அச்சக உரிமையாளர் வீட்டில் 35 சவரன் நகை கொள்ளை…

சிவகாசியில் அச்சக உரிமையாளர் வீட்டில் 35 சவரன் நகை கொள்ளை அடிக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சிவகாசியில் அச்சக உரிமையாளராக பணியாற்றி வருபவர் நந்தகுமார். இவர் தன் வீட்டில் குடும்பத்துடன் இவரவு உறங்கி கொண்டிருந்த நேரமாக பார்த்து சில மர்ம நபர்கள் அவர் வீட்டினுள் நுழைந்து உள்ளனர். பின்னர் வீட்டில் இருந்த பீரோவை சத்தம் கேட்காதபடி உடைத்து அதனுள் இருந்த 35 சவரன் நகை ரூ.1 லட்சம் கொள்ளையடித்தனர்.

மேலும் தன் வீட்டினுள் உறங்கி கொண்டிருந்த நந்தகுமார் மற்றும் அவர் குடும்பத்தை அவர்கள் தூங்கி கொண்டிருந்த அறையிலேயே பூட்டிவிட்டு கையில் கிடைத்ததை திருடி சென்றனர். காலையில் எழுந்த பார்த்த நந்தகுமார் தன் வீட்டில் திருட்டு போய் இருப்பதை கவனித்து குடிற்சி அடைந்துள்ளார். பின்னர் அருகில் இருந்த போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார்.

Exit mobile version