புனித் ராஜ்குமார் மரணம் அடைந்த பின்பு 15 நாட்களில் 6 ஆயிரம் பேர் கண் தானம்!!

கன்னட திரையுலகில் சூப்பர் ஸ்டாராக திகழ்ந்த புனித் ராஜ்குமார் கடந்த மாதம் (அக்டோபர்) 29-ந் தேதி திடீரென மாரடைப்பால் காலமானார். அவர் மரணம் அடைந்தாலும் தனது 2 கண்களையும் தானம் செய்திருந்தார். புனித் ராஜ்குமாரின் 2 கண்கள் மூலமாக நவீன மருத்துவ முறைகள் உதவியுடன் 4 பேருக்கு பார்வை கிடைத்துள்ளது.

அதே நேரத்தில் புனித் ராஜ்குமார் கண் தானம் செய்ததால், அவரது ரசிகர்களும் கண்தானம் செய்வதில் ஆர்வம் காட்டி வருகிறார்கள். பெங்களூரு உள்பட மாநிலம் முழுவதும் புனித் ராஜ்குமாரின் ரசிகர்கள் மட்டுமின்றி, பொதுமக்களும் தாங்களாகவே முன்வந்து அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு சென்று தங்களது இறப்பிற்கு பின்னர் கண்களை தானம் செய்வதாக கூறி பதிவு செய்து வருகின்றனர்.

அதன்படி, புனித் ராஜ்குமார் மரணம் அடைந்த பின்பு 15 நாட்களில் மட்டும் கர்நாடக மாநிலம் முழுவதும் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தங்களது கண்களை தானம் செய்திருப்பது தெரியவந்துள்ளது.

Exit mobile version