இந்திய விமான படையின் 88வது ஆண்டு தினம்: பிரதமர் மோடி வாழ்த்து..

இந்திய விமான படையின் 88வது ஆண்டு தினத்தினை முன்னிட்டு விமான படை போர் வீரர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்து உள்ளார்.

நம் இந்திய விமானப்படை ஆனது உலக அளவில் சக்தி வாய்ந்த விமானப்படையாக கருதப்படுகிறது. இது 1932 ஆம் ஆண்டு அக்டோபர் 8-ம் தேதி தோற்றுவிக்கப்பட்டது. இதனையடுத்து, ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 8-தேதி இந்திய விமான படை தினம் கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் இந்த ஆண்டு இந்திய விமானப்படை தொடங்கி 88 ஆண்டுகள் ஆகின்றன. இதனை அனைவரும் கொண்டாடி வருகின்றனர்.

இதனை முன்னிட்டு, விமான படை போர் வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். உலகின் உணமையான ஹீரோக்கள் என கருதப்படுபவர்களுள் இவர்களும் ஒருவர் என்பதில் எந்த ஐயமும் இல்லை.

இதுபற்றி அவரது டுவிட்டர் பதிவில் வெளியிட்டுள்ள செய்தியில், இந்திய விமான படை நாட்டின் வான்பகுதியை, எது வந்தபோதிலும், எப்பொழுதும் பாதுகாப்பாக வைத்திருப்பது மட்டுமல்லாமல் பேரழிவுகளின் போது மனிதகுல சேவையில் முக்கிய பங்கு வகிக்கிறது. உங்கள் தைரியம், வீரம் மற்றும் அர்ப்பணிப்பு நாட்டு மக்கள் அனைவருக்கும் உத்வேகம் அளிக்கிறது. என்று குறிப்பிட்டுள்ளார்.

Exit mobile version