ஐஸ்கிரீம் சாப்பிட்ட 5 வயது மகன் மரணம் : தாய் கைது

எலி மருந்து கலந்த ஐஸ்கிரீமை சாப்பிட்ட 5 வயது மகன் உயிரிழந்ததால் தாய் கைது செய்யப்பட்டுள்ளார்.

கேரளாவின் காசராகாட் மாவட்டத்தின்  கான்கன்காட் பகுதியை  சேர்ந்தவர் வர்ஷா  மன உளைச்சலில் இருந்த 25 வயதான வர்ஷா ஐஸ்கிரீம் எலி மருந்தை கலந்து சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

 பாதி ஐஸ்கிரீமை சாப்பிட்டதும் மயக்கமடைந்த வர்ஷா மயக்க நிலையில் தன்னுடைய அறைக்கு சென்றுள்ளார் மீதி ஐஸ்கிரீமை அப்படியே வைத்து விட்ட நிலையில் அதை பார்த்த வர்ஷாவின் ஐந்து வயது மகன் அதை சாப்பிட்டுள்ளார் 19 வயதான வர்ஷாவின் தங்கையும் சாப்பிட்டுள்ளார். இருவரும் பிரியாணி சாப்பிட்டு உறங்க சென்றுள்ளனர் நள்ளிரவில் திடீரென வர்ஷாவின் மகன் வாந்தி எடுத்துள்ளார்.

உடனடியாக மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். வர்ஷாவின் சகோதரிக்கும் உடல்நிலை பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார் இதனை தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் உண்மையை ஒப்புக் கொண்டுள்ளார் இதனால் கைது செய்த போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர்.

Exit mobile version