உணவகத்தில் மனித இறைச்சியை சமைத்து வந்த பெண் : அதிர்ச்சி சம்பவம்

உணவகத்தில் மனித இறைச்சியை சமைத்து வந்த பெண் அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது.

நைஜீரியாவில் அனாம்ப்ரா  மாகாணத்தில் உணவகம் நடத்தி வந்த ஒரு பெண்ணை அதிரடியாக போலீசார் கைது செய்துள்ள சம்பவம் பதற வைத்துள்ளது. உலகிலேயே குற்றச் சம்பவம் அதிகம் நடக்கும் நாடுகளில் ஒன்று நைஜீரியா இதற்கு முக்கிய காரணங்கள் வறட்சி, பஞ்சம், ஏழ்மை ஆகும்.

இந்நிலையில், அனாம்ப்ரா மாகாணத்தில் உள்ள குறிப்பிட்ட உணவகத்தில் மனித இறைச்சி விற்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனால் திடீரென போலீசார் உணவகத்தில் சோதனை நடத்தியுள்ளனர். அப்போது அங்கு மனித இறைச்சி விற்கப்படுவது கண்டறியப்பட்டது இறைச்சிக்காக பயன்படுத்தப்பட்ட மனித உடல் பாகங்களையும் சமைக்க தயாராக இருந்த இறைச்சியையும் போலீசார் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

பின்னர், உணவகத்தை நடத்தி வந்த பெண்ணை போலீஸார் கைது செய்து உள்ளனர் ஆனால் இறைச்சிக்காக நபர் கொல்லப்பட்டாரா அல்லது அது இறந்தவர்களின் உடலா என்பது குறித்த தகவலை போலீசார் வெளியிடவில்லை இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Exit mobile version