மீண்டும் அப்பாவாகிறாரா கார்த்தி?

நடிகர் கார்த்தி கடந்த 2011-ம் ஆண்டு ஈரோட்டைச் சேர்ந்த ரஞ்சனி என்பவரைத் திருமணம் செய்துகொண்டார். பெற்றோர் பார்த்து நிச்சயித்த இந்தத் திருமணம் கோயம்புத்தூரில் நடந்தது.
karthi

ரஞ்சனி கவுண்டம்பாளையத்தைச் சேர்ந்தவர். இத்தம்பதியருக்கு 2013-ம் ஆண்டு மகள் பிறந்தாள். மகளின் பெயர் உமையாள்.

7 ஆண்டுகளுக்குப்பிறகு இந்தாண்டு ஊரடங்கின் தொடக்கத்தில் மீண்டும் கர்ப்பமாகியிருக்கிறார் கார்த்தியின் மனைவி ரஞ்சனி. முதல் மூன்று மாதங்கள் சென்னையிலேயே இருந்தார்கள்.

ஜூன் மாதவாக்கில் சொந்த ஊரான கவுண்டம்பாளையம் சென்றுவிட்டார்கள். நடிகர் கார்த்தியும் மனைவியோடு கிராமத்தில் இருப்பதாகத் தெரிகிறது. விரைவில் இவர்களுக்கு அங்குள்ள மருத்துவமனையில் குழந்தைப் பிறக்க இருக்கிறது

Exit mobile version