கடும் மழையின் எதிரொலி முடங்கிய விமான சேவைகள்

தமிழகத்தில் கடந்த இரு தினங்களாக மிக கனமழையானது பெய்து கொண்டு வருகிறது. இதனால் தலைநகர் சென்னை உட்பட சில மாவட்டங்களில் கடந்த இரண்டு நாட்களாக மழை பெய்து வருகிறது. வானம் மேகமூட்டத்துடன் லேசான தூறல் விழுந்த படி அதிகாலை முதல் கால நிலையானது இருந்து வருகிறது. கனமழை காரணமாக நேற்று சென்னை விமான நிலையத்திற்கு வரவேண்டிய பல விமானங்கள் எல்லாம் பெங்களூர் விமான நிலையத்துக்கு திருப்பி விடப்பட்டன. சென்னையில் இருந்து கிளம்பும்போது விமானங்கள் தாமதமாகவே கிளம்பியது, ஒரு சில விமானங்களை ரத்து செய்யவும் நேரிட்டது எனவே மேற்கூறிய காரணங்களுக்காக சென்னையில் 2-வது நாளாக இன்றும் விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version