சேலத்தில் உயிருடன் குளிர்பதன பெட்டியில் வைக்கப்பட்டு மீட்கப்பட்ட முதியவர் சிகிச்சை பலனின்றி அரசு மருத்துவமனையில் உயிரிழந்தார்

சேலம் கந்தம்பட்டி பழைய வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் பாலசுப்பிரமணிய குமார் (வயது 74). இவருடைய தம்பி சரவணன் (70). இவர்களின் தங்கை மகள்கள் ஜெயப்பிரியா, கீதா. இவர்கள் 4 பேரும் ஒரே வீட்டில் வசித்து வருகின்றனர். இவர்கள் இப்படி வசித்து வந்த நிலையில் பாலசுப்ரணியம் அவர்களுக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டது.
இதனால் அவரை தனியார் மருத்துவமனையில் சேர்த்து அவருக்கு சிகிச்சை அளித்து வந்துள்ளனர். பின்னர் சில காரணங்களினால் அவரை அவரின் தம்பி வீட்டுக்கு அழைத்து வந்துள்ளனர். அவரை அழைத்து வந்த சிறிது நேரத்துக்குஎல்லாம் அவர் இறந்து விட்டதாக கருதி அவரை இறந்தவர்களை வாய்க்கு குளிர் சாதன பெட்டியில் வைத்துள்ளனர்.
பின்னர் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சூரமங்கலம் போலீசார் வந்து குளிர்பதன பெட்டியில் குளிரில் நடுங்கிக் கொண்டிருந்த முதியவரை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அதை தொடர்ந்து அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
மேலும் அந்த குளிர்சாதன பெட்டியை ஒழுங்காக உபயோகப்படுத்தாதாகவும், அண்ணன் உயிரோடு இருக்கும்போதே அவரை குளிசாதன பெட்டியில் வைத்த குற்றத்திற்காகவும் சரவணான் மீது இரண்டு வழக்குகள் பதியப்பட்டுள்ளது. அந்த விசாரணையில் சரவணன் கொஞ்சம் மனநிலை பாதிக்கப்பட்டவர் என தெரியவந்துள்ளது. மேலும் இந்நிலையில் சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பாலசுப்பிரமணிய குமார் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.