ரஜினிகாந்திற்கு பா.ஜ.க. மீது ஈடுபாடு அதிகம்-பிரமிட் நடராஜன்

நடிகர் ரஜினிகாந்திற்கு பா.ஜ.க. மீது ஈடுபாடு உள்ளதாக, அக்கட்சியில் இணைந்துள்ள நடிகர் பிரமீட் நட்ராஜன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் பா.ஜ.க.வை வலுப்படுத்த திரைப்பிரபலங்கள் பலரையும் பா.ஜ.க.வில் இணைக்கும் முயற்சியில் அக்கட்சித் தலைமை ஈடுபட்டு வருகிறது. இதன் காரணமாக, நடிகர்கள் ராதாரவி, நமீதா, காயத்ரி ரகுராம் உள்ளிட்ட பலரும் அக்கட்சியில் சமீபத்தில் இணைந்தனர். இந்த நிலையில், நடிகரும், தயாரிப்பாளருமான பிரமீட் நடராஜன் தமிழக பா.ஜ.க.வில் இணைந்தார். பின்னர், செய்தியாளர்களை சந்தித்த அவர், ரஜினிக்கு பா.ஜ.க. மீது ஈடுபாடு உள்ளதாக கூறினார்.

ரஜினிகாந்திற்கு பா.ஜ.க. மீதும், பிரதமர் மோடி மீதும் அசைக்க முடியாத நம்பிக்கை உள்ளது. பா.ஜ.க.வில் ரஜினிகாந்த் பங்கேற்க வேண்டும். தமிழ்நாட்டுக்கு அவர் தலைமையேற்க வேண்டும் என்று ரொம்ப வருடங்களாக பாடுபட்டுக் கொண்டிருக்கிறேன்.
சோ உயிருடன் இருக்கும் போதே, இல.கணேசன் டெல்லியில் உத்தரவு வாங்கிவிட்டு, ரஜினிகாந்திடம் அவரை பேசச் சொல்வார். ரஜினிகாந்திற்கு பா.ஜ.க. மீது ஒரு ஈடுபாடு. அதன் கொள்கையிலும் பிடிப்பு இருக்கிறது. எல்லாவற்றையும் மீறி அவருக்கு பிரதமர் மோடி மீது அசைக்க முடியாத நம்பிக்கை உள்ளது. ஆட்சியை பிடிக்கும். ரஜினி எப்படியாவது பாஜகவுக்கு வந்துவிட்டால், தமிழ்நாட்டில் பன்மடங்கு பா.ஜ.க. பிடிக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது. ரஜினிகாந்த் கட்சி ஆரம்பிக்காத பட்சத்தில், அவரை பா.ஜ.க.வுடன் இணைக்க நிச்சயமாகப் பாடுபடுவேன். நான் பா.ஜ.க.வில் இணைந்ததிற்கு இதுவும் ஒரு முக்கியமான காரணம். இவ்வாறு பிரமிட் நடராஜன் கூறினார்.

Exit mobile version