மருத்துவமனையில் இருந்து நலமுடன் வீடு திரும்பினார் கேப்டன்!!

இரண்டாம் கட்ட பரிசோதனைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த், அனைத்துப் பரிசோதனைகளையும் முடித்து நலமுடன் வீடு திரும்பியுள்ளார்.
Captain Vijayakanth

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் மற்றும் அவரது மனைவி பிரேமலதா இருவருக்கும் அண்மையில் கொரோனா உறுதியானதையடுத்து, இருவரும் சென்னை மியாட் மருத்துவமனையில் கொரோனா சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு, கடந்த 2-ஆம் தேதி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.

இதனைத்தொடர்ந்து, கடந்த 2 நாட்களுக்கு முன்னதாக, இரண்டாம் கட்ட பரிசோதனைக்காக மீண்டும் மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் விஜயகாந்த். அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும், விரைவில் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்றும் மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டிருந்தது. 

இந்நிலையில், தற்போது பரிசோதனைகள் அனைத்தும் முடிவடைந்து, பூரண நலம் பெற்று மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியுள்ளார், விஜயகாந்த்.

தற்போது விஜயகாந்த்தின் உடல்நிலை சீராக இருப்பதாகவும், முறையான சிகிச்சைக்குப் பிறகே அவர் டிஸ்சாரஜ் செய்யப்பட்டிருப்பதாகவும், மியாட் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Exit mobile version