போராட்டம் நடத்தும் விவசாயிகள் உயிரிழப்பு தொடர்பாக மத்திய அரசிடம் தரவுகள் இல்லை- மத்திய உள்துறை அமைச்சகம்


போராட்டம் நடத்தும் விவசாயிகள் உயிரிழப்பு தொடர்பாக மத்திய அரசிடம் தரவுகள் இல்லை என மத்திய உள்துறை அமைச்சகம் மாநிலங்களவையில் தெரிவித்துள்ளது.

டெல்லி,
போராட்டம் நடத்தும் விவசாயிகள் உயிரிழப்பு தொடர்பான தரவுகள் மத்திய அரசிடம் உள்ளதா? என்றும் அப்படி இருந்தால் அது தொடர்பான விவரங்கள் தொடர்பாக மாநிலங்களவை உறுப்பினர் ஒருவர் எழுத்துப்பூர்வமாக அவையில் கேள்வி எழுப்பியிருந்தார்.

இதற்கு பதிலளித்துள்ள மத்திய உள்துறை அமைச்சகத்தின் இணை அமைச்சர் நித்யானந்தா ராய்,
இந்திய அரசியலமைப்பின் 7வது விதிகளின்படி பாதுகாப்பு மற்றும் சட்டம் ஒழுங்கு மாநிலத்திற்கு உட்படுகிறது என்றும் விவசாயிகள் உயிரிழந்த தொடர்பான தரவுகள் அந்தந்த மாநில அரசுகள் சேகரித்து வைத்துள்ளதாகவும் மத்திய அரசிடம் அது போன்ற தரவுகள் இல்லை என மாநிலங்களவையில் மத்திய அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version