ஆன்லைன் விபச்சார கும்பலிடம் சிக்கிய சிறுமிகள்… போலீசாரை அதிர வைத்த கொடூர சம்பவம்!!

ஈரோடு பேருந்து நிலையம் எதிரே உள்ள தனியார் சொகுசு விடுதியில் ஒன்றுக்கும் மேற்பட்ட சிறுமிகளை வைத்து விபச்சாரம் நடைபெற்று வருவதாக ஈரோடு நகர காவல் துணை கண்காணிப்பாளர் ஆனந்தகுமார் அவர்களுக்கு ரகசியமாக தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதனை அடுத்து அவரது தலைமையில் உள்ள தனிப்படை போலீசார் ஈரோடு பேருந்து நிலையம் எதிரே உள்ள தனியார் சொகுசு விடுதியில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது திருப்பூர் மற்றும் பவானி பகுதியை சேர்ந்த இரண்டு சிறுமிகள் விபச்சாரத்தில் ஈடுபடுத்தப்பட்டு இருப்பது கண்டறியப்பட்டது. பின்னர் அந்த சிறுமிகளை தனிப்படை போலீசார் மீட்டனர் இந்த சிறுமிகளை பணத்திற்காக பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய திருப்பூரை சேர்ந்த அங்குசாமி என்பவர் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

விபச்சாரத்தில் ஈடுபடுத்தப்பட்ட இரண்டு சிறுமிகளும் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு 18 வயது பூர்த்தி அடையவில்லை என்பதால் தரகர் வேலை பார்த்த அங்குசாமியை போக்சோ சட்டத்தில் கைது செய்ய சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Exit mobile version