சென்னை மக்களுக்கு அரிய வாய்ப்பு – மீண்டும் ஊக்கத்தொகை அறிவிப்பு

சென்னையில் உள்ள 13 லட்சம் சொத்து உரிமையாளர்களிடமிருந்து ஏப்ரல் மற்றும் அக்டோபர் மாதங்களில் அரையாண்டுக்கான சொத்து வரி வசூல் செய்யப்படுகிறது. முதல் 15 நாட்களுக்குள் வரியை செலுத்துபவர்களுக்கு ஐந்து சதவீத ஊக்கத்தொகை அதிகபட்சமாக 5000 ரூபாய் வரை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அந்த வகையில் ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் 15-ஆம் தேதி வரை நடப்பாண்டுக்கான சொத்து வரியை செலுத்தியவர்களுக்கு சென்னை மாநகராட்சி ஊக்கத்தொகை வழங்கியது. அதாவது 15 நாட்களில் மட்டும் 275 கோடி ரூபாய்க்கு அதிகமாக வரி வசூலாக இருப்பதாக மாநகராட்சி தரப்பில் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள சொத்து வரி விவரங்கள் குறித்த செய்தி குறிப்பில், கடந்த 15ஆம் தேதி வரை 4,89,790 உரிமையாளர்கள் வரி செலுத்தி ஊக்கத்தொகை பெற்று பயனடைந்து இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த 15 நாட்களில் 290 கோடி ரூபாய் வரை வசூல் ஆகியுள்ளதாகவும் சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. இதையடுத்து 15 ஆம் தேதிக்குள் சொத்துவரி செலுத்த முடியாதவர்கள் தங்களுக்கு ஊக்கத்தொகை இனிமேல் கிடைக்காது என கலக்கத்தில் இருந்து வந்தபோது தற்போது மாநகராட்சி மீண்டும் ஊக்கத்தொகை சலுகையை அறிவித்துள்ளது. அந்த வகையில் வருகிற 30-ஆம் தேதிக்குள் சொத்துவரி செலுத்துபவர்களுக்கு ஏற்கனவே அறிவித்தபடி ஊக்கத்தொகை வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது. அதேபோல் உரிமையாளர்கள் சொத்து வரியை தங்கள் இல்லம் தேடி வரும் வரி வசூலிப்பவர்களிடம் சொத்து வரியை செலுத்தலாம் எனவும் மாநகராட்சி அலுவலகங்களில் அமைந்துள்ள இ- சேவை மையங்களில் செலுத்தலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.

Exit mobile version