ஒரு மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை

திருச்சியில் உள்ள சமயபுரம் மாரியம்மன் கோயிலின் சித்திரை தேர் திருவிழா வருகிற ஒன்பதாம் தேதி கொடி ஏற்றத்துடன் தொடங்குகிறது. இந்த திருவிழாவில் முக்கிய நிகழ்வுகள் ஏப்ரல் 18 மற்றும் 19-ம் தேதிகளில் நடைபெற உள்ளது.
இந்நிலையில் இந்த விழாவிற்கு தமிழகம் முழுவதும் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்வார்கள். இதனால் மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் ஏப்ரல் 18 மற்றும் 19-ஆம் தேதிகளில் திருச்சி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளித்து உத்தரவிட்டுள்ளார். மேலும் அன்றைய தினங்களில் பொது தேர்வு நடக்கும் பள்ளிகள் மற்றும் தேர்வு நடக்கும் கல்லூரிகளுக்கும் இந்த விடுமுறை அறிவிப்பு பொருந்தாது என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறை நாட்களை ஈடு செய்யும் விதமாக ஏப்ரல் 29 மற்றும் மே 13-ஆம் தேதி வேலை நாளாக செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version