பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு… அடுக்கடுக்காய் அதிரடி உத்தரவுகள்

கள்ளக்குறிச்சி மாணவி உயிரிழந்த சம்பவத்தை அடுத்து பள்ளிக்கல்வித்துறை சில அதிரடி உத்தரவுகளை பிறப்பித்துள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கனியாமூர் சக்தி மெட்ரிக்குலேஷன் பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வந்த மாணவி ஸ்ரீமதி மர்மமான முறையில் உயிரிழந்தார். இந்த மரணம் தொடர்பாக சிபிசிஐடி அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் பள்ளிக்கல்வித்துறை அதிரடியாக சில உத்தரவுகளை பிறப்பித்துள்ளது.

பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது: *பள்ளிகளில் மாணவர்கள் தங்களுக்குள் மோதிக் கொள்ளுதல், ஆசிரியர்கள் மோதல், பாலியல் வன்முறை, சத்துணவில் பல்லி விழுதல், சாலை விபத்து உள்ளிட்ட ஏதேனும் அசம்பாவிதங்கள் நடந்தால் உடனடியாக அவரவர் சார்ந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலரின் (சிஇஒ) கவனத்திற்கு எடுத்துச் செல்ல வேண்டும்.

-பா.ஈ.பரசுராமன்.

Exit mobile version