பஞ்சாப் மாநிலம் லூதியானா நீதிமன்றத்தில் வெடித்தது ஐ.இ.டி… தேசிய பாதுகாப்பு படை உறுதி


பஞ்சாப் மாநிலம் லூதியானா நீதிமன்றத்தில் வெடித்தது ஐ.இ.டி என தேசிய பாதுகாப்பு படை ( NSG ) உறுதிபடுத்தியுள்ளது.

டெல்லி,
கடந்த 23ம் தேதி பஞ்சாப் மாநிலம் அமிர்தரஸ் லூதியான நீதிமன்றத்தின் இரண்டாவது மாடியில் வெடி விபத்து நிகழ்ந்தது; இதில் ஒருவர் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டர். இந்நிலையில் இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம் அறிக்கை கேட்ட நிலையில், தேசிய பாதுகாப்பு படை மற்றும் தடயவியல் நிபுணர்கள் வெடிவிபத்து நடந்த கழிவறை பகுதியை சோதனையிட்டு வெடி பொருட்களின் எச்சங்களை சேகரித்தனர். இந்நிலையில் அவை ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட போது அவை (IED) ஐ.இ.டி என தெரியவந்துள்ளதாக என்.எஸ்.ஜி குழு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக கொடுக்கப்பட்டுள்ள விளக்கத்தில், IED வெடி பொருளை அதிக மக்கள் நடமாட்டம் உள்ள பகுதியில் எடுத்து வந்து இருக்கலாம் ஆனால் அதனை கழிவறைகளை வைத்து எடுத்து செல்ல முயன்ற போது அவை வெடித்து இருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது. மேலும், IED வெடித்ததன் காரணமாக கழிவறையில் இருந்த தண்ணீர் குழாய் உடைந்து நீர் வெளியேறும் போது வெடி மருந்து அடித்து செல்லப்பட்டுள்ளது. இதனால் வெடி பொருள் கலவையை கண்டறிவதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளதாகவும், இருப்பினும் வெடி பொருள் எச்சங்களில் உள்ள மாதிரிகளை ஆய்வு செய்ததில் அவை IED என தெரியவந்துள்ளதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. மேலும், வெடி விபத்து நடந்த போது உயிரிழந்த ஒருவர் மட்டுமின்றி மேலும் சிலர் சிசிடிவி மூலம் சந்தேகிக்கப்படுவதாகவும், ஒரு செல்போன் கைப்பற்றப்பட்டுள்ளது என்பதால் அதன் அடிப்படையில் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கபட்டுள்ளது.

Exit mobile version