ஒர் மாவட்டத்திற்கு மட்டும் 2 நாட்களுக்கு விடுமுறை

திருச்சியில் உள்ள புகழ்பெற்ற சமயபுரம் மாரியம்மன் திருக்கோவிலின் சித்திரை தேர் திருவிழாவானது நாளை (ஏப்ரல் 18) நடைபெற உள்ளது. அதேபோல ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் சித்திரை தேர் திருவிழாவும் நாளை மறுநாளும் (ஏப்ரல் 19) நடைபெற உள்ளது. இந்த இரண்டு திருவிழாக்களிலும் தமிழகம் முழுவதும் மட்டுமல்லாமல் பல்வேறு ஊர்களில் இருந்தும் பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.
இதனால் பக்தர்களுடைய நலனை கருத்தில் கொண்டு திருச்சி மாவட்டத்திற்கு நாளை மற்றும் நாளை மறுநாள் உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த நாளில் அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் அனைத்திற்கும் விடுமுறை என அறிவித்துள்ளார். ஆனால் தேர்வு நடைபெற உள்ள பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு இந்த விடுமுறை அறிவிப்பு பொருந்தாது எனவும் தெரிவித்துள்ளார்.

Exit mobile version