கிரண் (KIRAN) சேவைத் தொலைபேசி மூலம் 13 மொழிகளில் உதவி வழங்க ஏற்பாடு
சமூக நீதி அமைச்சகம் ‘kiran’ என்ற உதவிச் சேவையை உருவாக்கியது. 1800-599-0019 என்ற எண்ணில் இயங்கும் என்று தகவல்கள் வெளியாகின்றன.
கொரோனா பாதிப்பினால் வெளியில் செல்ல முடியாமல் மன உளைச்சலுக்கு ஆளாகும் மக்களுக்கு உதவும் வகையில் இந்தச் சேவை உருவாக்கப்பட்டுள்ளது. மக்கள் மன நலம், மன உளைச்சல், முதலுதவி மற்றும் மாறுபட்ட பழக்க வழக்கங்கள் போன்ற பிரச்சனைகளை கேட்டறிந்து உதவ முடியும் என்று அமைச்சகம் தெரிவிக்கிறது. கொரோனாவால் மட்டுமல்லாமல் மக்களுக்கு ஏற்படும் பீதி, மனச்சோர்வு, தற்கொலை எண்ணங்கள் போன்ற பிரச்சனைகளும் தீர்க்கும் வண்ணம் இந்தச் சேவை செயல்படும் என்று அமைச்சகம் கூறுகிறது.
660 உளவியலாளர்கள் (psychologists) மற்றும் 668 மன நல மருத்துவர்கள் கொண்டு இயக்கப்படும் இச்சேவை 25 மையங்களிலிருந்து செயல்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது 3 நிலைகளில் இயங்கும். முதலில் அழைப்பாளர் இடதிற்கேற்ப மையத்திற்கு மாற்றப்பட்டு, அவர்களது தேவைக்கேற்ப உளவியலாளர்கள்/மனநல மருத்துவருக்கு மாற்றப்படும். மேலும் தேவைப்படும் உதவிகள் மற்றும் கேள்விகள் 3ஆம் நிலையில் செயல்படும்.
மக்களின் மனநல உதவிக்கு அரசாங்கம் செய்யும் இந்த முயற்சி மிகவும் வரவேற்கத்தக்கது