மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு மீண்டும் அதிகரிப்பு!!!

கர்நாடக மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்ததை தொடர்ந்து, அங்குள்ள கபினி மற்றும் கிருஷ்ண ராஜசாகர் அணைகள் வேகமாக நிரம்பின. இதனையடுத்து இந்த இரு அணைகளில் இருந்து உபரி நீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டது.

வினாடிக்கு 1 லட்சம் கனஅடிக்கு மேல் தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதனால் மேட்டூர் அணையும் வேகமாக நிரம்பி வந்தது. பின்னர் மழை படிப்படியாக குறைந்ததையடுத்து திறந்து விடப்படும் தண்ணீரின் அளவும் 5,938 கனஅடியாக குறைந்தது.

இந்த நிலையில் நேற்று மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 5,938 கன அடியில் இருந்து 6,957 கன அடியாக அதிகரித்துள்ளது. தற்போது அணையின் நீர்மட்டம் 96.80 அடியாகவும், நீர்இருப்பு 60.72 டி.எம்.சி.யாகவும் இருக்கிறது.

டெல்டா பாசனத் தேவைக்காக காவிரியில் 18,000 கன அடியும் , கிழக்கு, மேற்கு கால்வாய்க்கு 600 கன அடியும் நீர் திறக்கப்பட்டுள்ளது.

Exit mobile version