இத்தாலிக்கு டாக்டருக்கு படிக்க போன தமிழக மாணவன் தற்கொலை?

இத்தாலியில் டாக்டருக்கு படிக்கபோன ஊட்டி இளைஞர், 3வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
white shape of body and blood stains on asphalt texture

நீலகிரி மாவட்டம், கீழ்க்கோத்தகிரி பகுதியை சேர்ந்தவர் சதானந்த் இவர் ஒரு தேயிலை விவசாயி. இவரது மகன் பிரதிக்ஷ் வயது 21. இத்தாலியிலுள்ள ஒரு மருத்துவ கல்லூரியில் 3ஆம் ஆண்டு மருத்துவம் படித்து வருகிறார்.
இவர் நேற்று முன்தினம் திடீரென 3-வது மாடியிலிருந்து கீழே குதித்து தற்கொலை செய்துகொண்டார்.இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தற்கொலை செய்து கொண்ட மாணவனின் அண்ணன், இத்தாலியிலுள்ள ஒரு தனியார் கம்பெனியில் பொறியாளராக வேலை பார்த்து வருகிறார். அவர் வீட்டுக்கும் ப்ரகதீஸ் கல்லூரிக்கும் கிட்டத்தட்ட 50 கிமீ தூரம் இருக்குமாம். அதனால் தனியாகவே பிரதிக்‌ஷ் காலேஜ் பக்கத்திலேயே அறை எடுத்து தங்கி படித்து வந்துள்ளார்.

இத்தாலியில் கொரோனா பரவல் அதிகமாக இருப்பதால், எல்லா மாணவர்களும் சொந்த நாட்டுக்கு சென்றுவிட்டனர். அதனால் பிரதீக்ஸ் மட்டுமே அறையில் தனியாக இருந்துள்ளார் தொடர்ந்து ஒரே அறைக்குள்ளே அடைந்து கிடந்ததால், மன அழுத்தம் அதிகமாகிவிட்டது.

இந்த விஷயம் அவரது அண்ணனுக்கு மெதுவாகத்தான் தெரியவந்து இருக்கிறது. எனவே உடனடியாக தம்பியை அழைத்து கொண்டு அங்கிருந்த மருத்துவ மனையில் அனுமதித்து இருக்கிறார். கிட்டத்தட்ட ஒரு மாதம் மன அழுத்தம் தொடர்பாக சிகிச்சை அளித்துள்ளார்.

மன அழுத்தம் அதிகமானதால் கடந்த 10-ம் தேதி தன் அப்பாவுடன் வீடியோ காலில் பேசும்போதுகூட, ரொம்ப மன அழுத்தம் உள்ளதாகவும் வரும் 13-ம் தேதி இந்தியா வருவதாகவும் சொல்லி உள்ளார். போனை கட் செய்த அவர் அடுத்த சில நிமிடங்களில், அண்ணன் வீட்டின் மூன்றாவது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

இவரது சடலம் இந்தியா கொண்டு வர நடவடிக்கை எடுக்க பட்டு வருகிறது.டாக்டருக்கு படிக்க போன மாணவன், இப்படி திடீர் என தற்கொலை செய்து கொண்டது நீலகிரியை மாவட்டத்தையே சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

Exit mobile version