மூன்றாவது வார சனிக்கிழமை ரேஷன் கடைகளுக்கு விடுமுறை – அரசு அறிவிப்பு…

இந்த மாதம் முதல் நவம்பர் வரை ரேஷன் கடைகளுக்கு மாதத்தின் மூன்றாவது வார சனிக்கிழமை விடுமுறை நாட்களாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

தமிழக உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு ஆணையர், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக நிர்வாக இயக்குனர் அவர்களின் உயர் அதிகாரிகளுக்கு ஒரு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

அதில் அவர் குறிப்பிட்டது யாதெனில் தமிழகத்தில் கொரோனா தொற்று காரணமாக ரேஷன் அட்டைதாரரின் வீடுகளுக்கு சென்று ரேஷன் கடை ஊழியர்கள் டோக்கன் வழங்கும் பணியை மேற்கொண்டனர். ரேஷன் கடையின் விடுமுறை நாட்களான கடந்த ஜூலை 10, ஆகஸ்டு 7, செப்டம்பர் 4 ஆகிய தேதிகளில் பணியாற்றினர்.

இதுபோல் அவர்கள் விடுமுறை நாட்களிலும் பணியாற்றியதால் அவர்களுக்கு விடுமுறை அளிக்க வேண்டும். அதனால் இந்த மாதம் 19-ந்தேதி, வரும் அக்டோபர் 17-ந்தேதி, நவம்பர் 21-ந்தேதி ஆகிய நாட்கள் (மாதத்தின் மூன்றாவது வார சனிக்கிழமை) ரேஷன் கடைகளுக்கு விடுமுறை நாட்களாக அறிவிக்கப்படுகிறது.

Exit mobile version