மகள் ரிதி-யின் புகைப்படத்தை முதல் முறையாக பகிர்ந்தார் ரியோ ராஜ்.
எதார்த்தமான பேச்சு, இயல்பான அணுகுமுறை என தனக்கே உரித்தான பாணியில் கேஷுவலாக லைவ் ஷோவில் கலக்கி தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை உருவாக்கியவர் நடிகர் ரியோ ராஜ். இவ்வாறு சன் மியூசிக்கில் விஜேவாக பிரபலமான ரியோ அதை தொடர்ந்து விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி நெடுந்தொடரில் நடித்ததன் மூலம் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து குடும்பங்களுக்கும் அறிமுகமானார்.
“நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா” திரைப்படத்திற்கும் முன் விக்ரம் பிரபு நடிப்பில் வெளியான சத்ரியன் திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்த ரியோவுக்கு “நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா” ஒரு முழு ஹீரோவுக்கான அடையாளத்தை பெற்று தந்தது. படிப்படியாக தொலைக்காட்சியிலிருந்து இப்பொழுது வெள்ளித்திரையில் ஜொலித்து வரும் ரியோ 2017 ஆம் ஆண்டு ஸ்ருதி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இந்நிலையில் இந்த அழகான தம்பதிக்கு சில மாதங்களுக்கு முன்பு ஒரு அழகான பெண் குழந்தைப் பிறந்த நிலையில், குழந்தையின் முகத்தை இதுவரை வெளியில் காட்டாத ரியோ இப்பொழுது முதன் முறையாக ஆறு மாதத்திற்கு பிறகு வெளியிட்டுள்ளார். மேலும் அதில் ரியோ கூறியிருப்பதாவது தனது மகள் ரிதி-யின் அரையாண்டு முடிந்துவிட்டது, ஆம் இப்பொழுது ரிதிக்கு வயது ஆறு மாதம் என மகிழ்ச்சியுடன் தனது செல்ல மகளுடன் இருக்கும் முதல் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.