இலங்கை பிரதமர் ராஜபக்சே திருப்பதியில் நாளை தரிசனம் – பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்

இலங்கை பிரதமர் ராஜபக்சே இன்று மாலை திருப்பதிக்கு வருகை தருகிறார். இலங்கையிலிருந்து விமானம் மூலம் ரேணிகுண்டா விமான நிலையம் வரும் அவரை சித்தூர் கலெக்டர் ஹரி நாராயணன் மற்றும் திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் வரவேற்கின்றனர்.

திருமலையில் உள்ள கிருஷ்ணா நிவாஸ் விருந்தினர் மாளிகையில் இரவு தங்கும் அவர் நாளை வெள்ளிக்கிழமை காலை வி.ஐ.பி. பிரேக் தரிசனத்தில் ஏழுமலையானை தரிசனம் செய்கிறார். அவருக்கு திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் லட்டு, பெருமாள் படம் மற்றும் பிரசாதங்கள் வழங்குகின்றனர்.

பின்னர் மீண்டும் விமானம் மூலம் இலங்கை புறப்படுகிறார். ராஜபக்சே வருகையை முன்னிட்டு திருப்பதி மற்றும் திருமலையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

Exit mobile version