சூலூர் விமானப்படை தளத்தில் மூத்த சகோதரரின் போலி ஆதார் எண்ணை அளித்து ஒப்பந்த ஊழியராக 6 மாதமாக பணியாற்றி வந்த பீஹார் இளைஞர் கைது.

சூலூர் விமானப்படை தளத்தின் உதவி பாதுகாப்பு அதிகாரி ஜஸ்வந்த் சிங் அளித்த புகாரில் , பீஹாரை சேர்ந்த முஹம்மது சம்சுதீன்(26) என்பவர் அவருடைய மூத்த சகோதரரின் ஆதாரை மாற்றி கொடுத்து பணிக்கு சேர்ந்துள்ளதாகவும், கடந்த ஆறு மாதமாக ஒப்பந்த பணியாளராக பணியாற்றிய நிலையில் தற்போது ஆதார் கார்டை போலியாக கொடுத்து சேர்ந்துள்ளார் என்பது தெரியவந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இதனையடுத்து சூலூர் காவல் துறையினர் சம்சுதீன் மீது மோசடி உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து சூலூர் போலீஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். பாதுகாப்பு மிகுந்த சூலூர் விமான நிலையத்தில் பீஹாரைசேர்ந்த ஒருவர் ஆதார் கார்டை மாற்றி பணிக்கு சேர்ந்த விவகாரம் , அங்குள்ள அதிகாரிகளிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Exit mobile version