ஒரு மாவட்டத்திற்கு மட்டும் விடுமுறை

திருவண்ணாமலை மாவட்டத்தில் ஏப்ரல் 4ம் தேதி மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு டாஸ்மாக் கடைகளுக்கு அன்று ஒரு நாள் மட்டும் உள்ளூர் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. மேலும் அன்றைய தினம் அம்மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகள், முன்னாள் ராணுவ வீரர்களுக்கான அங்காடிகள், அரசு மற்றும் தனியார் மதுக்கூடங்கள் போன்றவற்றிக்கு விடுமுறை அளிக்கப்பட வேண்டும் என மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
இந்த விதிமுறைகளை மீறி கள்ளத்தனமாக மதுபானம் விற்பனை செய்தால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அம்மாவட்ட நிர்வாகம் எச்சரித்துள்ளது.

Exit mobile version