முதியோர் காப்பகத்தில் மனம் திறந்த காதல் : 65 வயது பாட்டியை கரம்கோர்த்த 58 வயது நபர்

முதியோர் காப்பகத்தில் மனம் திறந்த காதல் 65 வயது பாட்டியை 58 வயது நபருடன் திருமணம் நடைபெற்றது.

கேரளாவில் உள்ள முதியோர் காப்பகத்தில் காதலர் தினத்தன்று அரங்கேறி உள்ள ருசிகர சம்பவம் காதலுக்கு மொழி, இனம், வயது, என எதுவும் ஆகிவிடாது என்பதை எடுத்துக்காட்டியுள்ளது.

திருச்சியை சேர்ந்த ராஜன் என்பவர் சபரிமலை சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கடைகளில் சமையல் வேலை செய்து வந்துள்ளார். திருமணமாகாத இவர் தனது வருவாயை சொந்த ஊரில் உள்ள சகோதரிகளுக்கு வழங்கி வாழ்ந்து வந்த நிலையில், கொரோனாவால் வாழ்வாதாரம் இழந்து அரூர் பகுதியில் உள்ள மகாத்மா காந்தி முதியோர் காப்பகத்தில் சேர்க்கப்பட்டு உள்ளார்.

மண்ணடி பகுதியைச் சேர்ந்த வாய் பேச இயலாத சரஸ்வதி என்பவரும் திருமணமாகாமல் அரவணைப்பு இல்லாமல் தவித்த நிலையில் அதே காப்பகத்தில் சேர்க்கப்பட்டு உள்ளார். காப்பகத்தில் ராஜனும் சரஸ்வதிக்கும் அறிமுகமாகி நண்பர்களாக பழக ஆரம்பித்து நாளடைவில்  காதலர்களாக  மாறி இவர்களின் காதல் விவகாரத்தை அறிந்த காப்பக நிர்வாகிகள் காதலர் தினத்தன்று இருவருக்கும் திருமணம் செய்து வைத்துள்ளனர்.

Exit mobile version