விழுப்புரம் அருகே ஓரினச் சேர்க்கைக்கு மறுத்த பள்ளிச்சிறுவனை கழுத்தை நெரித்து கொலை செய்த வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர்.

விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தை அடுத்த நொச்சிக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவருக்கு தேவன்ராஜ் என்ற 13 வயதில் மகன் இருந்துள்ளான். இந்தநிலையில் அவரின் புதல்வன் திடீரென மாயமாக மறைந்துள்ளார் இதனால் பதட்டம் அடைந்த அவரின் தந்தை அருகிலுள்ள போலீஸ் நிலையத்திற்கு புகார் அளித்துள்ளார்.
பின்னர் போலீசார் அவரது மகனின் தொலைபேசி என்னை ட்ரஸ் செய்து வந்துள்ளனர். அந்த தொலைபேசியானது கடைசியாக தொடர்பு கொண்டவர் லிஸ்டில் அதே தெருவை சேர்ந்த கலைமணி என்பவரின் அபினேஷ் என்பவரின் எண்ணும் இருந்திருக்கின்றது. பின்னர் அவரை அழைத்து விசாரித்த போது, கடந்த 10 ஆம் தேதி அன்று, சிறுவனை செல்போனில் தொடர்பு கொண்ட அபினேஷ், இந்த பகுதியில் உள்ள பனை மரங்களில் கிளிகள் உள்ளன. அவைகளை பிடித்து வளர்க்கலாம் வா என்று கூறி அழைத்துள்ளார். சிறுவனை உடன் அழைத்து சென்ற அபினேஷ் ஓரின சேர்க்கையில் ஈடுபட வற்புறுத்தியுளளார். அதற்கு சிறுவன் மறுக்கவே, கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார் என்ற விவிகாரம் தெரியவந்துள்ளது.
அதனை தொடர்ந்து அபினேஷ் அந்த சிறுவனின் உடலை புதைத்த இடத்தையும் கூறியுள்ளார். பின்னர் அந்த இடத்திற்கு விரட்ணஹா போலீசார் அவனின் உடலை மீட்டு தற்போது பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளார். மேலும் அபினேஷ் மீது வழக்கு தொடர்ந்தும் உள்ளனர்.