கொரோனா இருந்தால் ரூ.50000 பரிசு : பிரிட்டன் அரசு பரிசீலிப்பு

கொரோனா இருந்தால் ரூ.50000 பரிசு தருவதாக பிரிட்டன் அரசு பரிசீலித்து வருகிறது.

பிரிட்டன் :

கொரோனா தொற்று இருப்பவர்களுக்கு 50,000 ரூபாய் பணம் வழங்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. இங்கிலாந்தில் கடந்த ஆண்டின் இறுதியில் புதிய கொரோனா வைரஸ் பரவத் தொடங்கியது. இதனால் தினசரி கொரோனா பாதிப்பு கட்டுக்கடங்காமல் உயர்ந்து வருகிறது. மருத்துவமனைகள் நோயாளிகளால் நிரம்பி வழிவதால் மருத்துவ ஊழியர்கள் கடும் நெருக்கடியில் இருக்கின்றனர்.

இங்கிலாந்தில் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இதனால் மக்களிடையே புதிய நம்பிக்கை பிறந்துள்ளது. எனினும், புதிய கொரோனா வைரஸ் 70% அதிக வேகத்தில் பரவுவதால், தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கையையும் கட்டுப்படுத்த முடியவில்லை. மக்கள் ஆர்வமாக கொரோனா பரிசோதனை செய்துகொள்ள ஊக்குவிப்பதற்காக, கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோருக்கு 500 பவுண்ட் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.50,000) பணம் வழங்க பிரிட்டன் அரசு திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியானது.

மக்கள் ஆர்வமாக கொரோனா பரிசோதனை செய்துகொள்ள ஊக்குவிப்பதற்காக, கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோருக்கு 500 பவுண்ட் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.50,000) பணம் வழங்க பிரிட்டன் அரசு திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியானது. கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்ட நபர்களுக்கு பணம் கொடுக்க இதுவரை அரசு எந்தவொரு முடிவும் எடுக்கவில்லை என பிரிட்டன் சுற்றுச்சூழல் அமைச்சர் ஜார்ஜ் இயூஸ்டிஸ் தெரிவித்துள்ளார்.

Exit mobile version