திருமணமான 43 நாட்களில் மணப்பெண் கழுத்து அறுத்து கொலை செய்த மணமகன்… கொடூர சம்பவம்…!!

திருமணமான 43  நாட்களில் மணப்பெண் கழுத்து அறுத்து கொலை செய்த மணமகன் கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது..

தமிழகத்தில் திருமணமான 43  நாட்களில் புதுப்பெண்ணை கொன்று விட்டு மாப்பிள்ளையும் தற்கொலை செய்து கொண்ட கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளது. சேலத்தின் கோரத்துப்பட்டியை சேர்ந்தவர் தங்கராஜ் விவசாயியான இவர் வீடுகளுக்கு செட்டாப் பாக்ஸ் பொருத்தும் பணியும் செய்து வருகிறார். இவருக்கு மோனிஷா என்ற பெண்ணுக்கும் கடந்த 43  நாட்களுக்கு முன்னர் திருமணம் நடந்துள்ளது.

இந்நிலையில், நேற்று காலை இருவருக்கும் தகராறு ஏற்படவே கடும் கோபத்தில் இருந்த தங்கராஜ் மோனிஷாவின் கழுத்தை அறுத்துள்ளார். இதில் மோனிஷா ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து இறக்கவே தங்கராஜ் கேபிள் வயரை எடுத்து தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். வெகுநேரம் ஆகியும் கதவு திறக்கப்படாததால் சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் உள்ளே சென்று பார்த்துள்ளனர். தங்கராஜ் பிணமாக தொங்கியுள்ளார்.

Read more : செக்ஸ் மாத்திரைக்கு ஆசைப்பட்டு இணையக் கொள்ளை கும்பலால் ரூ.2.17 லட்சத்தை இழந்த நபர்…!!

உடனடியாக, போலீசாருக்கு தகவல் தெரிவித்ததும் விரைந்து வந்த அதிகாரிகள் இருவரின் சடலத்தை கைப்பற்றி விசாரணை தீவிரப்படுத்தினர். போலீசாரின் முதல்கட்ட விசாரணையில் மனைவி மீது ஏற்பட்ட சந்தேகத்தால் அவரை கொன்றுவிட்டு தங்கராஜ் தற்கொலை செய்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. இது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Exit mobile version