ஒற்றை வாக்கு வித்தியாசத்தில் ஊராட்சி மன்ற தலைவரான கடல்மணி!!

திருச்சியில் கடல்மணி என்பவர் சக வேட்பாளரை ஒரு ஓட்டு வித்தியாசத்தில் வென்று ஊராட்சி மன்ற தலைவர் ஆகியுள்ளார்.

தமிழகத்தின் 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தல் அக். 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டமாக நடைபெற்று முடிந்தன. இதில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது.

திருச்சி மாவட்டம் சிறுமருதூர் ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கான இடைத்தேர்தலில் கடல்மணி என்பவர் ஒரு ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். இவர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட கன்னியம்மாள் என்பவர் 423 வாக்குகள் பெற்ற நிலையில் கடல்மணி 424 வாக்குகள் பெற்று வென்று ஊராட்சி மன்ற தலைவர் ஆனார். இவர்கள் இருவரும் திமுகவைச் சேர்ந்தவர்கள் குறிப்பிடத்தக்கது.

Exit mobile version