பள்ளி வகுப்பறையில் மாணவர்கள் செய்த செயல்… சமூக வலைதளங்களில் வைரலாகும் காதல் காட்சியால் அதிர்ச்சியில் பெற்றோர்!!

தமிழக கேரள எல்லையான கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளையை அடுத்த பளுகல் பகுதியில் அரசு மேல்நிலை பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது.

இந்த பள்ளியில் கொரோனா கட்டுப்பாடுகளுடன் தற்போது வகுப்புகள் நடைபெற்று வரும் நிலையில், அந்த பள்ளியில் 12-ம் வகுப்பு படிக்கும் மாணவர் ஒருவர் கடந்த 2-ம் தேதி செவ்வாய் கிழமை வகுப்பறையில் வைத்து தன்னுடன் அதே வகுப்பில் படிக்கும் மாணவி ஒருவருக்கு நண்பர்களின் வற்புறுத்தலின் பேரில் தாலி கட்டி திருமணம் செய்து கொண்டுள்ளார்.

மாணவன் மாணவிக்கு தாலி கட்டும் போது சக மாணவர்கள் காகிதங்களை கிழிந்து அவர்கள் மீது மலர்கள் போல தூவி வாழ்த்து தெரிவித்துள்ளனர். இதை உடன் இருந்த மாணவர் ஒருவர் செல்போனில் படம் அதன் வீடியோ காட்சிகளை எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார்.

அது வைரலாகி வரும் நிலையில், மாணவியின் தந்தை ஜஸ்டின் இந்த திருமண சம்பவம் குறித்து களியக்காவிளை காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளார்.

பெற்றோரின் புகார் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பள்ளி செல்லும் மாணவ மாணவியர்கள் படிப்பில் கவனம் செலுத்தாமல் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவது பெற்றோர் மத்தியில் அதிர்ச்சியையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்த சம்பவம் குறித்து கன்னியாகுமரி மாவட்ட பள்ளி கல்வித்துறை அதிகாரிகளும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Exit mobile version