திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆவணித்திருவிழா கொடியேற்றம்

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆவணித்திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

திருச்செந்தூர் :

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் முருகப்பெருமானின் ஆறுபடை வீடுகளில் 2-ம் படை வீடு.இந்த கோவிலில் நடைபெறும் திருவிழாக்களில் ஆவணித் திருவிழாவும் முக்கியமான ஒன்றாகும்,இதை முன்னிட்டு இன்று அதிகாலை 1 மணிக்கு கோவில் நடைதிறக்கப்பட்டு, 1.30 மணிக்கு விஸ்வரூபம், 2 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து 5 மணி முதல் 5.30 மணிக்குள் ஆவணித் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

நிகழ்ச்சியில் பங்கேற்ற பக்தர்கள் மற்றும் உபயதாரர்களுக்கு அனுமதி இல்லை மேலும் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக திருவிழா நிகழ்ச்சிகள் அனைத்தும் கோவில் உள்பிரகாரத்தில் வைத்து நடைபெறும். என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகளான கொடியேற்றம், 5-ம் திருநாள் குடைவரை வாயில் தீபாராதனை, 7, 8-ம் திருவிழா சுவாமி சண்முகர் எழுந்தருதல் ஆகிய நிகழ்ச்சிகள் பக்தர்கள் வசதிக்காக https://youtu.be/MjiiXtXHNVI என்ற யூ டியூப் முகவரியில் நேரடியாக பார்க்கலாம் என்று கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Exit mobile version