பாஜகவுடன் இணைந்து ஆட்சி அமைப்போம் – பஞ்சாப் முதல்வர்!

பஞ்சாபில் பாஜகவுடன் இணைந்து ஆட்சி அமைப்போம் என பஞ்சாப் முதல்வர் அம்ரிந்தர் சிங் தெரிவித்துள்ளார்.

பஞ்சாப் மாநிலத்தின் முதல்வர் அம்ரிந்தர் சிங் அவர்கள் காங்கிரசில் இருந்து விலகி பஞ்சாப் லோக் காங்கிரஸ் எனும் கட்சியை தொடங்கி உள்ளார். இந்நிலையில் நேற்று அவர் பாஜகவை சேர்ந்த ஹரியானா மாநில முதல் மந்திரி மனோகர் லால் கட்டார் அவர்களை சந்தித்து பேசினார்.

அதன் பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், ஹரியானா முதல் மந்திரியுடன் நடைபெற்ற இந்த சந்திப்பு மரியாதை நிமித்தமான சந்திப்புதான். பஞ்சாபில் பாஜக மற்றும் சுக்தேவ்சிங் திண்ட்சா தலைமையிலான அகாலிதள பிரிவுடன் சேர்ந்து ஆட்சி அமைப்போம் எனவும், எனது கட்சியில் பிரபலங்கள் சேருவதை பொறுத்திருந்து பாருங்கள் எனவும் அவர் பத்திரிக்கையாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

பாஜக கொண்டு வந்த வேளாண் சட்டங்களால் பஞ்சாப் உள்ளிட்ட விவசாயிகள் ஆத்திரமடைந்தனர் அதனைத் தொடர்ந்து தலைநகர் டெல்லியில் ஓராண்டு காலமாக போராட்டம் நடத்தி வந்தனர். இந்த நிலையில் தான் நேற்று வேளாண் சட்டங்கள் ரத்து மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில் பாஜகவோடு கூட்டணி உறுதி என பஞ்சாப் மாநில முதல்வர் தெரிவித்துள்ளார்.

Exit mobile version