வெல்கம் பேக் ஏர் இந்தியா… ரத்தன் டாடா நெகிழ்ச்சி!!

இந்திய அரசுக்கு சொந்தமான ஏர் இந்தியா விமான நிறுவனத்தை டாடா நிறுவனம் வாங்கியுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ரத்தன் டாடா தெரிவிக்கையில் டாடா நிறுவனம் ஏர் இந்தியாவை ஏலத்தில் எடுத்து உள்ளது மிகவும் அருமையான ஒரு செய்தி. திரும்பவும் ஏர் இந்தியா நிறுவனத்தை கட்டமைக்க எங்களுக்கு சிறிது காலம் ஆகும். ஏர் இந்தியா நிறுவனத்தை வாங்கியிருப்பது டாடா நிறுவனத்தின் சந்தை மதிப்பை நிச்சயம் உயர்த்தும்.

ஏர் இந்தியா நிறுவனம் ஜே ஆர் டி டாடா அவர்களது கட்டமைப்பின் கீழ் இருந்த பொழுது மக்களிடம் மிகுந்த மரியாதையையும் உலக அளவில் இருந்த ஏர்லைன்களிடம் மிகச்சிறந்த தனி அந்தஸ்தையும் பெற்றிருந்தது. இப்போது நம்மிடையே ஜே ஆர் டி டாடா அவர்கள் இருந்திருந்தால் மிகுந்த மகிழ்ச்சி அடைந்திருப்பார். இந்திய அரசாங்கம் பல துறைகளிலும் தனியாருக்கு வாய்ப்புகளை வழங்கி வருகிறது இதற்காக இந்திய அரசாங்கத்திற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.

வெல்கம் பேக் ஏர் இந்தியா என ரத்தன் டாடா பதிவு செய்துள்ளார்.

Exit mobile version