பள்ளிகள் திறப்பு, புறநகர் ரயில் சேவை, திரையரங்குகள் திறப்பு ஆகியவை குறித்து முதல்வர் ஆலோசனை நடத்தவுள்ளார்.

கொரோனா பரவல் காரணமாக மார்ச் மாதம் முதல் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டு வரும் நிலையில் ஒவ்வொரு மாத இறுதியிலும் அடுத்தக்கட்ட தளர்வுகள் என்ன, எதற்கு அனுமதி, எதற்கு தடை என மக்கள் விவாதிக்க தொடங்கிவிடுகின்றனர். ஏனென்றால் மாத இறுதிகளில் முதலமைச்சர் மருத்துவ நிபுணர்கள், மாவட்ட ஆட்சியர்கள், அதிகாரிகள், அமைச்சர்களுடன் ஆலோசனைகளை நடத்தி முக்கிய அறிவியங்கள் தெரிவித்து வருகின்றார்.
அந்தவகையில் அடுத்த கட்ட தளர்வுகள் குறித்து நாளை (அக்டோபர் 28) மாவட்ட ஆட்சியர்கள், மருத்துவ நிபுணர்கள் குழுவுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தவுள்ளார். இதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த முறை எதர்கெல்லாம் தடை எதர்கெல்லாம் தளர்வு என மக்களை விவரித்து வருகின்றனர்.
கொரோன தடுப்பு முறைகளால் கொரோன தாக்குதல் சற்றே குறைந்து தற்போது மக்களும் நடமாடி வருகின்றனர். இந்த நிலையில் தீபாவளி காரணத்தினால் கூட்டநெரிசல் அதிகரித்து வருகின்றது. இதனால் கொரோன தோற்று பரவுமா என்று பயப்படுகின்றனர். அதனால் புறநகர் மின்சார ரயில்களை இயக்கினால் கூட்ட நெரிசலை குறைக்கலாம் என்று கூறப்படும் நிலையில் மத்திய அமைச்சருக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார். இந்நிலையில் இன்னும் சில தினங்களில் அறிவிக்கப்படவுள்ள ஊரடங்கு தளர்வு அறிவிப்பில் சென்னை புறநகர் மின்சார ரயில் இயக்கம் எனும் அறிவிப்பு கட்டாயம் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
புதுச்சேரி போன்ற மாவட்டத்தில் திரையரங்குகள் திறந்ததால் தமிழகத்திலும் தீர்க்கக்கோரி முதலமைச்சருக்கு மனு எழுதி உள்ளனர். இதையும் கருத்தில் கொண்டு முடிவெடுப்பார் என எதிர்ப்பாக படுகிறது. மேலும் பள்ளிகள் திறப்பு பற்றிய தகவலையும் எதிர்பாக்கலாம் என கருதப்படுகிறது.