கொரோனா தடுப்பூசி: உலக சுகாதார மையம் சொல்வது என்ன?

கொரோனாவுக்கான தடுப்பு மருந்தை கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் மும்முரமாக ஈடுபட்டுள்ளன. ஒன்பது மாதங்களுக்கும் மேலாக உலகை ஆட்டிப்படைக்கும் கொரோனாவுக்கு முடிவுரை எழுதப்போவது யார் என்ற போட்டி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

ரஷ்யா, அமெரிக்கா, இந்தியா என பல நாடுகளில் கண்டறியப்பட்டு வரும் தடுப்பு மருந்துகள் பல்வேறு கட்ட சோதனைகளுக்கு உட்படுத்தப்படுகின்றன. இருப்பினும் தடுப்பூசி அனைவருக்கும் கிடைக்க எதனை நாட்கள் ஆகும் என்று உறுதியாகத் தெரியவில்லை.

கொரோனாவுக்கான மருந்து பாதிக்கப்பட்ட அனைவருக்கும் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என உலக சுகாதார மைய பொது இயக்குநர் டெட்ரோஸ் கூறியுள்ளார்.

சில வல்லரசு நாடுகள் குறிப்பிட்ட நாடுகளுக்கு மருந்து தர மறுத்தால், பொருளாதார எல்லா நாடுகளும் தேவைகளை எவ்விதம் பூர்த்தி செய்து கொள்ளும் என்ற கேள்வி எழுகிறது.

இந்நிலையில் “தடுப்பூசி தேசியவாதம் தொற்றுநோயை நீடிக்கும், அதைக் குறைக்காது” என்று வெள்ளிக்கிழமை செய்தியாளர் சந்திப்பில் டெட்ரோஸ் அதனோம் கூறினார்.

“வரும் மாதங்களில், கோவிட் -19 க்கான தடுப்பூசி குறித்து நல்ல செய்தி கிடைக்கும் என்று நாங்கள் அனைவரும் நம்புகிறோம். ஆனால் நம்மிடம் ஒரு பயனுள்ள தடுப்பூசி இருந்தால், அதை திறம்பட பயன்படுத்த வேண்டும், ” என்று அவர் கூறினார்.

“காலப்போக்கில், உற்பத்தி அதிகரிக்கும் போது, எல்லா இடங்களிலும் உள்ள அனைவருக்கும் தடுப்பூசிகள் கிடைக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். ஆனால் ஆரம்பத்தில், உற்பத்தி குறைவாக இருக்கும்போது, வயதானவர்கள், முன்களப் பணியாளர்கள் மற்றும் அதிக ஆபத்தில் உள்ளவர்களுக்கு தடுப்பூசி போடுவதற்கு முன்னுரிமை கொடுக்கப்பட வேண்டும். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், முதல் முன்னுரிமை சில நாடுகளில் உள்ள அனைவருக்கும் என்பதை விட, எல்லா நாடுகளிலும் சிலருக்கு தடுப்பூசி போடுவதாக இருக்க வேண்டும், ”என்று அவர் கூறினார்.

ஒன்றோடொன்று இணைக்கப்பட்ட நம் உலகில், குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளில் உள்ளவர்கள் தடுப்பூசிகளைத் தவறவிட்டால், வைரஸ் பரவுவதை தடுக்க முடியாது. உலகளவில் பொருளாதார மீட்சி தாமதமாகும்,” என்று அவர் கூறினார்.

Exit mobile version