குமரி அருகே கணவனுடன் வீடியோ காலில் பேசிக்கொண்டிருந்த போது இளம்பெண் விஷமருந்தி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் அமராவதிவிளையைச் சேர்ந்தவர் செல்வராஜ். இவரது மனைவி ஆக்னல் (31). இவர்களுக்கு திருமணமாகி 5 ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில் 4 வயதில் ஆண் குழந்தையும், 2 வயதில் பெண் குழந்தை ஒன்றும் உள்ளது. செல்வராஜ் ஓமனில் வேலை பார்த்து வந்தார். இவர் ஓர் எண்ணெய் கம்பெனியில் இன்ஜினீயர் ஆகா வேலை பார்த்து வந்துள்ளார்.
அதனால் இவரின் மனைவி தங்களது தாய் வீட்டில் குழந்தையுடன் தங்கி வந்துள்ளார். இந்த நிலையில் கணவனுக்கும் மனைவிக்கு வெகு நாளாக கருத்துவேறுபாடு நிலவி வநதுள்ளது. இவர்கள் ஒரு நாள் வீடியோ கால் பேசி வந்துள்ளனர். அன்று கர்த்து வேறுபாடு இருவருக்கும் இடையில் முத்தியுள்ளது. இவரது மனைவி வீடியோ கால் செய்வதற்கு முன்பே விஷ பாட்டில் அதனை தயாராக வைத்துள்ளார். அதனை அந்த வீடியோ கால் பேசும்போது குதித்துள்ளார். இதனால் பதறிப்போன கணவர் அவரின் பெற்றோருக்கு தகவல் அளித்துள்ளார். பின்னர் அவன் பெற்றோர்கள் இவரை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி ஆக்னல் பரிதாபமாக உயிரிழந்தார். மகள் உயிர் பரிதவித்து சென்ற நிலையில் கதறி அழுத ஆக்னலின் பெற்றோர் சம்பவம் குறித்து அஞ்சுகிராமம் காவல் நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். முதற்கட்ட விசாரணையை முன்னெடுத்த போலீசார் தம்பதிக்கு திருமணமாகி 5 ஆண்டுகளே ஆகியுள்ளதால் விசாரணையை கோட்டாட்சியர் வசம் மாற்றினர்.
தற்போது அவரின் உடல் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்துள்ளார். மேலும் அவரின் தற்கொலைக்கு என்ன காரணம் என்ற விசாரணை நடத்தி வருகின்றனர்.