மொபட்டில் கஞ்சா கடத்திய இளம்பெண்

மொபட்டில் கஞ்சா கடத்திய இளம்பெண் கைது செய்யப்பட்டார்.

சூளைமேடு பகுதியில் கில்நகர் பார்க் அருகே வாகனத்தில் கஞ்சா கடத்துவதாக தகவல் வரவே போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது மொபட்டில் வந்த இளம்பெண் போலீஸ்களை பார்த்ததும் வண்டியில் இருந்து இறங்கி தப்பி ஓடியுள்ளார். இதனை கவனித்த காவல் துறை அந்த பெண்ணை பின்தொடர்ந்து உள்ளனர்.

பின்னர் அந்த பெண்ணை மடக்கி பிடித்துள்ளனர். மேலும் அவரின் மொபட்டை சோதனை செய்துள்ளனர். அப்போது அந்த வண்டியில் நான்கு கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்துள்ளது. அதுகுறித்து நடந்த விசாரணையில் அவர் கொளத்தூர், விநாயகபுரம் வெங்கடேஸ்வரா நகர் 6வது தெருவை சேர்ந்த உதயவாணி என்றும், மேலும் இவர் ஆந்திராவில் இருந்து கஞ்சா வாங்கி வந்து சென்னையில் விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது.

Exit mobile version