அடடா! நம்ம பாட்டிங்களுக்குத் தெரிஞ்சது, நமக்குத் தெரியாமப் போச்சே?!

மஞ்சளோட மகத்துவம் பத்திதான் நாம இதில தெரிஞ்சிக்கப் போறோம். அதுதான் எல்லாருக்கும் தெரியுமே!? இதுல என்ன புதுசா தெரிஞ்சிக்கப் போறோம்ன்னு நீங்க நினைக்கிறத என்னால உணர முடியுது..

உண்மைதான் மஞ்சள் தலைச்சிறந்த கிருமிநாசினியாக செயல்பட்டு நம்முடலில் நோய்க்கிருமிகளை வரவிடாமல் தடுக்கும் ஒரு அற்புதமான மருந்து என்பது எல்லோருக்கும் தெரிந்த ஒன்றுதான். ஆனால் மஞ்சளைப் பற்றி உங்களுக்குத் தெரியாத சில விஷயங்களும் உள்ளது, அதைப்பற்றி தெரிந்து கொள்ளலாம் வாருங்கள்!

மூளைக்கு ஊக்கமளிக்கும்

நீங்கள் எப்போதும் சோர்வாக இருக்கிறீர்களா ?? அப்படியென்றால் , உங்கள் மூளைக்கு ஊக்கமளிக்க பூஸ்ட், ஹார்லிக்ஸ், டீ, காபி இவையெதுவுமே வேண்டாம். ஒரு கிளாஸ் மஞ்சள் தூள் பால் அருந்தினாலே போதுமாம் உடனே நீங்கள் சுறுசுறுப்பாக மாறிவிடுவீர்களாம்.. மந்தமாக செயல்பட்டுக் கொண்டிருந்த உங்கள் மூளையும் படுபயங்கரமாக வேலை செய்யுமாம்..

அட! இத நான் சொல்லலங்க ஆஸ்திரேலியாவில் ஒரு பல்கலைக்கழகத்தில் நடந்த ஆராய்ச்சியில் கண்டுபிடித்து சொல்லியிருக்கிறார்கள். அதுமட்டுமில்லங்க, மஞ்சளில் உள்ள குர்குமின் என்கிற பொருள் ஞாபக சக்தியைக்கூட அதிகரிக்குமாம். அதனால உங்க வீட்டில எல்லாருக்கும் முக்கியமா உங்க கணவருக்கும் இனிமே மறக்காம மஞ்சள்தூள் பால் கொடுத்து ஞாபக சக்தியை அதிகரிச்சு, மூளையையும் நல்லா ஸார்ப்பா செயல்பட வையுங்கள்.

உடல் எடையைக் குறைக்க

நீங்க எப்போதும் உடல் எடையைக் குறைப்பதற்கு பல்வேறு உடல்பயிற்சி செய்துகொண்டே இருக்கும் நபரா??அப்படியென்றால் உங்கள் உணவில் மஞ்சள்தூளை அதிகம் சேர்த்துக் கொள்ளுங்கள். மஞ்சள்தூள் உங்கள் உடலில் தேவையில்லாத கொழுப்பைக் குறைப்பதோடு, உடல் எடையைக் குறைப்பதற்கும் உதவிபுரியுமாம்.

அதனால உங்க வீட்டுல யாருக்குக் கொழுப்பு அதிகமா இருக்குதோ, அவங்களுக்கு கொஞ்சம் அதிகமா மஞ்சளை சேர்த்துக் கொடுங்கள். எங்கள் வீட்டில் எனக்குத்தான் அதிகம் மஞ்சள்தூள் பால் கொடுக்கிறார்கள்😀ஒருவேளை என் வாய்க்கொழுப்பைக் குறைப்பதற்காகக்கூட இருக்கலாம் என்று நினைக்கிறேன் 🤔

கேன்சர் வராமல் தடுக்கும்

இப்போது மாறியுள்ள வாழ்க்கை சூழ்நிலையில், சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் கேன்சர் போன்ற கொடிய நோய்கள் வர ஆரம்பித்துவிட்டது. அதனால் எல்லோர் மனதிலும் கேன்சரைப் பற்றிய ஒரு பயம் இருந்துகொண்டேதான் உள்ளது. அப்படிப்பட்ட நோய்கள் வராமல் தடுப்பதற்கு நம் எல்லோருக்கும் எளிதில் கிடைக்கக் கூடிய, எல்லோர் வீட்டு சமையலறையில் உள்ள இந்த மஞ்சளை அதிகமாகப் பயன்படுத்துங்கள். இந்த அற்புதமான மருந்தானது நம்முடலை கேன்சர் போன்ற கொடிய நோய்கள் வரவிடாமல் பாதுகாக்கும்.

வலிநிவாரணி

உங்களுக்குத் தலைவலி, உடல்வலி, முதுகுவலி போன்ற அனைத்துப் பிரச்சனைகளுக்கும் மருந்தாக மூவ், ஜண்டு பாம் இவற்றைத்தானே பயன்படுத்துகிறீர்கள்?? அல்லது பாராசிட்டமல், இபுப்ரோபின் போன்ற வலி நிவாரணி மாத்திரைகளைத் தானே எடுத்துக் கொள்கிறீர்கள். ஆனால் உங்களுக்கு ஒன்று தெரியுமா? மஞ்சளில் உள்ள குர்குமின் என்ற பொருளானது இவையெல்லாவற்றையும்விட சிறந்த வலிநிவாரணியாக செயல்படுகிறது என ஆராய்ச்சியில் கண்டுபிடித்துள்ளார்களாம்.! அதனால் இனிமேல் நீங்கள் சமைக்கும்போது மஞ்சளைக் கொஞ்சம் அதிகமாகவே சேர்த்துக்கொள்ளுங்கள். வலிநிவாரணி மாத்திரைகளுக்கு குட்பை சொல்லுங்கள்.

முகத்தில் கரும்புள்ளிகளை நீக்க

உங்கள் முகத்தில் கரும்புள்ளிகள் இருக்கிறதா? அல்லது உங்கள் முகம் பொலிவிழந்து காணப்படுகிறதா? அப்படியென்றால், மஞ்சளை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்வதோடு மட்டுமில்லாமல், முகத்திலும் பூசிக் குளியுங்கள். மஞ்சளில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட் மற்றும் குர்குமின் என்ற பொருளானது உங்கள் முகத்தில் உள்ள கரும்புள்ளிகளை மறையச் செய்வதோடு மட்டுமில்லாமல், உங்கள் முகத்தில் இருக்கும் தழும்புகளைக்கூட மறையச் செய்யுமாம்!

அட! நம்ம பாட்டிங்க எல்லாம் ஒருவேள பெரிய அறிவியல் ஆராய்ச்சியாளராதான் இருந்துருப்பாங்களோ?! அந்தக் காலத்துலே மஞ்சளோட மகத்துவம் தெரிஞ்சு முகத்துல மஞ்சள் தேச்சிக் குளிச்சு சருமத்தைப் பாதுகாத்திருக்காங்களே! நம்மதான் மஞ்சள்தேச்சுக் குளிச்சா அதுவொரு பட்டிக்காட்டுத்தனம்னு நெனச்சிக்கிட்டு இருக்கிறோம். நம்மளும் இனிமே மஞ்சள் தேய்த்துக் குளித்து நம் சருமத்தைப் பாதுகாப்போம்!

Exit mobile version