பீகார் செல்கிறார் முதல்வர்!

வருகிற 2024-ம் ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலுக்கு எதிர்க்கட்சிகளை ஓரணியில் ஒன்று திரட்டும் முயற்சியில், பீகார் முதல்-மந்திரி நிதிஷ்குமார் ஈடுபட்டு வருகிறார். இதற்காக பாட்னாவில் எதிர்க்கட்சிகள் எல்லாம் கலந்து கொள்ளும் கூட்டம் ஒன்று நாளை நடைபெற திட்டமிடப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் அனைத்து எதிர்க்கட்சித் தலைவர்களும் பங்கேற்க வேண்டும் என நிதிஷ்குமார் கேட்டுக் கொண்டார். இந்த கூட்டத்தில் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்ள விரும்புவதாக நேற்று முன்தைய தினம் நடைபெற்ற ‘கலைஞர் கோட்டம்’ திறப்பு விழா நிகழ்வில் அறிவித்தார். இந்த நிலையில், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் (வியாழக்கிழமையான இன்று பீகார் செல்கிறார். இன்று மாலை 5.30 மணிக்கு சென்னையில் இருந்து சிறப்பு விமானம் மூலம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பாட்னா செல்ல உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version