புதிய தலைவர் தேர்தல்: காங்கிரஸ் இன்று ஆலோசனை!

இன்று நடைபெறும் காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் தலைவர் தேர்தல் குறித்து ஆலோசிக்கப்படவுள்ளது.

காங்கிரஸ் காரியக் கமிட்டி கூட்டம் இடைக்கால தலைவர் சோனியா காந்தி தலைமையில் இணைய வழியாக இன்று கூடுகிறது. அதில், உட்கட்சி அமைப்புத் தேர்தல் குறித்து விவாதிக்கப்பட உள்ளது. வேளாண் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகளின் போராட்டம், பட்ஜெட் கூட்டத் தொடரில் எழுப்ப வேண்டிய விஷயங்கள் குறித்தும் ஆலோசனை நடைபெறுகிறது.புதிய காங்கிரஸ் தலைவர் பற்றி விவாதிக்கப்பட இருக்கிறது.


மக்களவைத் தேர்தல் தோல்வியை அடுத்து காங்கிரஸ் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார் ராகுல் காந்தி. இதனால் 2019ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இடைக்கால தலைவராக சோனியா காந்தி நியமிக்கப்பட்டார். மீண்டும் தலைவராக ராகுல் காந்தி பொறுப்பேற்க வலியுறுத்தப்பட்டபோதிலும் அவர் மறுத்துவிட்டார்.


சமீபத்தில் உட்கட்சித் தேர்தலை நடத்துவதற்காக மதுசூதனன் மிஸ்திரி தலைமையில் 5 பேர் கொண்ட குழுவை அமைத்தார் சோனியா காந்தி. காரியக் கமிட்டி கூட்டத்தில் புதிய தலைவர் தேர்தலுக்கான சில பரிந்துரைகளையும் மதுசூதனன் மிஸ்திரி அளிக்கிறார். உட்கட்சித் தேர்தலை நடத்தும் தேதியும் அதில் முடிவு செய்யப்படுகிறது.

read more: சசிகலாவுக்கு அதிதீவிர நுரையீரல் தொற்று


தேர்தல்களில் ஏற்பட்ட தொடர் தோல்விகளை அடுத்து, கட்சியை மறுசீரமைப்பு செய்ய வேண்டும், முழு நேர தலைவரை நியமிக்க வேண்டுமென காங்கிரஸ் மூத்த தலைவர்கள் சோனியாவுக்கு கடிதம் எழுதியது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version