பிப். 21-ல் மக்கள் நீதி மய்யத்தின் பிரம்மாண்ட மாநாடு

மக்கள் நீதி மய்யம் கட்சியின் நான்காம் ஆண்டு தொடக்க விழாவை கொண்டாடும் வகையில் சென்னையில் வரும் பிப்ரவரி 21 ஆம் தேதி பிரம்மாண்ட மாநாடு நடைபெறும் என மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

கட்சி தொடங்கப்பட்ட பிறகு முதல்முறையாக அக்கட்சியின் பொதுக்குழு கூட்டப்படுகிறது. சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு கட்சி சார்பிலும் தேர்தல் அறிக்கை தயாரிப்பு, பிரச்சாரம் உள்ளிட்ட பல்வேறு பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. மக்கள் நீதி மய்யம் கட்சியின் முதலாவது பொதுக்குழு கூட்டம் பிப்ரவரி 11-ம் தேதி கட்சித் தலைவர் கமல்ஹாசன் தலைமையில் சென்னை வானகரத்தில் நடக்க உள்ளது. இதில், தமிழக, புதுச்சேரி சட்டப்பேரவை தேர்தல், மக்கள் நீதி மய்யத்தின் 4-ம் ஆண்டு தொடக்க விழா மாநாடு உள்ளிட்டவை தொடர்பான பல்வேறு முக்கிய முடிவுகளை கமல்ஹாசன் அறிவிக்க உள்ளார் என்று அவர் தெரிவித்துள்ளார். “மண்ணையும், மக்களையும், மொழியையும் காக்கவே நாம் களமிறங்கி இருக்கிறோம்” என்றும்  கமல்ஹாசன் கூறியுள்ளார்.

Exit mobile version