இன்னும் 2 நாட்களில் வருகிறது மெகா அறிவிப்பு… அமைச்சர் மா.சு. அதிரடி!

மூன்றாம் கட்டமாக நடைபெற்ற மெகா தடுப்பூசி முகாமிற்கு மக்கள் பெருமளவில் வரவேற்பு தந்ததாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசியதாவது: நாங்கள் நினைத்ததை விட மதியம் 12 மணியளவில் எங்கள் இலக்கை அடைந்துவிட்டோம் என்றும், 50 லட்சம் தடுப்பூசிகள் கேட்டிருந்தோம், ஆனால் 28 லட்சம் தடுப்பூசிகள் மட்டுமே வந்து இருந்தது அதை மாவட்டம் வாரியாக பிரித்து அனுப்பி 24 லட்சம் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது, அதில் 3 லட்சம் தடுப்பூசிகள் கையிருப்பு இருக்கிறது. நாங்கள் கேட்டது போல 50 லட்சம் தடுப்பூசிகள் இந்த வாரத்தில் தமிழகத்திற்கு அனுப்பப்பட்டால் நான்காவது மெகாவார தடுப்பூசி போடுவது தொடர்பான அறிவிப்பு இன்னும் 2 நாட்களில் வெளியாகும் என்றும் கூறினார். மேலும் தடுப்பூசி செலுத்துவதை திருவிழாவைப் போல் தமிழகம் முழுவதும் கொண்டாடி கொண்டிருக்கிறோம்.


மக்களே சாரை சாரையாக வந்து தடுப்பு ஊசி செலுத்தி கொள்கிறார்கள் அதனால் அவர்களை கட்டாயப்படுத்த வேண்டிய அவசியமில்லை தடுப்பூசி போட்டுக் கொள்வதற்காக கட்டாயப்படுத்தினால் அப்படியே தடுப்பு ஊசி செலுத்தி கொள்ள அவர்களை கட்டாயபடுத்தினால் அதில் தவறும் இல்லை என தெரிவித்தார்.

Exit mobile version