நாதக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் அறிவிப்பு

நாம் தமிழர் கட்சி வரும் ஞாயிற்றுக்கிழமை (31.07.2022) மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு அழைத்து விடுத்துள்ளது.

இது தொடர்பாக சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், எண்ணூர் கொற்றலை ஆற்றின் மீன்பிடி பகுதியில் தமிழ்நாடு மின் தொடரமைப்புக் கழகம் சட்டவிதிகளை மீறி ஆக்கிரமித்துக் கட்டிவரும் உயர்மின் கோபுரங்களின் கட்டுமானத்தை எதிர்த்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் 31.07.2022 ஞாயிற்றுக்கிழமை காலை 10:00 மணிக்கு நடைபெறுகிறது. மண்ணையும் மக்களையும் உயிருக்கு மேலாக நேசிக்கும் ஒவ்வொருவரும் ஒன்றிணைவோம்! இந்த மண் உரிமை காப்பது நம் கடமை என்று அதில் கூறப்பட்டுள்ளது.

Exit mobile version