இந்திய மக்கள் பிரதமர் மோடி மீது மிகுந்த நம்பிக்கையை வைத்துள்ளனர் ! பிரகாஷ் ஜவடேகர் கருத்து

கடந்த 9 ஆண்டுகால அரசியல் ஆட்சியில் மோடி அரசின் எந்த ஒரு அமைச்சர் மீதும் எதிர்க்கட்சிகளால் ஒரு ஊழல் குற்றச்சாட்டு கூட இல்லை.எந்த வித குடும்ப அரசியலும் கூட இல்லை இதனால் இந்திய மக்கள் அனைவரும் பிரதமர் மோடியின் மீது மிகுந்த நம்பிக்கையை வைத்துள்ளனர்.மேலும் மோடி அரசாங்கமும் யாரிடமும் பாகுபாடு காட்டுவதில்லை. எந்த மாநிலத்துடனும், எந்த மதத்துடனும் பாகுபாடு காட்ட இல்லை. மோடி அரசு ஏழைகளை எல்லாம் கவனித்து வருகிறது.பிரதமர் மோடி வளர்ச்சி அரசியல் செய்து வருகிறார். உள்கட்டமைப்பு முதல் பொது அதிகாரமளிக்கும் திட்டங்கள் வரை பிரதமர் மோடி நாட்டை முன்னோக்கி கொண்டு செல்வதற்காக உழைத்து வருகிறார். உலக அளவில் இந்தியாவின் அந்தஸ்து கொஞ்சம் உயர்ந்து இருக்கிறது.இந்தியாவின் அந்நிய செலாவணி கையிருப்பு அதிகரித்துள்ளது, ஏற்றுமதி அதிகரித்துள்ளது, தொழில்துறை உற்பத்தி மற்றும் உற்பத்தி அதிகரித்துள்ளது. விவசாய உற்பத்தி உயர்ந்துள்ளது. பிரதமர் மோடி அரசாங்கம் தொலைநோக்கு பார்வையுடன் செயல்பட்டு வருகிறது” என பிரகாஷ் ஜவடேகர் கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version