“திரு. ஸ்டாலின் அவர்களே.. அது கண்ணாடி!” 

ஸ்டாலின் எங்கு இருந்தாலும், அவரது எண்ணம் முழுக்க தனது எழுச்சிப்பயணத்தைச் சுற்றியே தான் இருக்கிறது என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். 

தமிழ்நாடு முழுக்க சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் எடப்பாடி பழனிசாமி, தன்னை விமர்சித்து வரும் திமுக தலைவர் ஸ்டாலின் குறித்து தனது சமூக ஊடகப் பக்கத்தில் பதிலடி கொடுத்துள்ளார். அதில், “உங்களுடன் ஸ்டாலின்” ன்னு ப்ரோமோஷன் பண்ணியிருப்பதாக சொல்லியிருக்கிறீர்கள், ஆனால் AMMA -வின் திட்டத்தை copy paste செய்துள்ளீர்கள் என்பதை உரக்க சொல்லி இருக்கிறேன்,  அதுதான் நீங்கள் விரும்பும்  விளம்பரமா? “சொந்தமாக ஒரு திட்டத்தை யோசித்து நிறைவேற்ற வக்கில்லாமல், இப்படி அதிமுக ஆட்சியின் அம்மா திட்டத்திற்கு ஸ்டிக்கர் ஓட்டுறீங்களே… உங்களுக்கு வெட்கமாக இல்லையா?” என்று தானே நான் கேட்டேன்? அதற்கு என்ன பதில் சொல்வீங்க? ஊர் ஊராக கருப்பு பெட்டி தூக்கித் திரிந்து ஏமாற்றியது போதாது என்று, ஒரு துண்டுசீட்டில் 46 பெயர்களை அச்சடித்து யாரை ஏமாற்றுகிறீர்கள்? இந்த 46 சேவைகளையும் நீங்கள் நான்கு ஆண்டுகள் செய்யவே இல்லை என்று அளிக்கும் ஒப்புதல் வாக்குமூலம் தானே இது? பத்து தோல்வி என்று என்னைப் பார்த்து சொல்லும் முன்னர் உங்கள் வரலாற்றைப் பார்த்திருக்க வேண்டாமா?

இப்படி ஒரு தேர்தல் வரலாற்றை வைத்துக்கொண்டு, என்னைப் பற்றி ஸ்டாலின் பேசலாமா? இதில் சினிமா வசனம் வேறு… “அதுக்கு நீ சரிப்பட்டு வர மாட்ட” என்று கூறுகிறார்… திரு. ஸ்டாலின் அவர்களே… “நீ எதுக்குமே சரிப்பட்டு வரமாட்ட” என்பதைத் தான் மக்கள் சொல்லிட்டு இருக்காங்க! இந்த திரைப்பட காமெடி ஒன்று வருமே… “யாரோ இவன் மூளைக்குள்ளே போய் இவனை டாக்டர்ன்னு நம்ப வெச்சுட்டாங்க” என்று. அது மாதிரி, யாரோ சிலர் ஸ்டாலின் மூளைக்குள்ளே போய், “இவர் நடத்துவது நல்ல ஆட்சி தான்” என்று நம்ப வைத்துவிட்டார்கள் போல… Good Bye சொல்லப்போறாங்களாம் மக்கள். மீண்டும் சொல்கிறேன், 

“திரு. ஸ்டாலின் அவர்களே.. அது கண்ணாடி!” BYE BYE STALIN ! எனக் குறிப்பிட்டுள்ளார்.

Exit mobile version