தியாகத் தலைவியே, ராஜ மாதாவே வருக – சசிகலா வரவேற்பு பேனரால் பரபரப்பு

தமிழ் நாட்டை வழிநடத்த வருகை தரும் அதிமுக கழகத்தின் பொதுச்செயலாளர், தியாகத்தின் மறு உருவம் எங்களின் ராஜமாதாவே வருக! வருக! ” என்று சசிகலாவை வரவேற்று போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருப்பதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை தண்டனை பெற்ற சசிகலா கடந்த 27-ம் தேதி விடுதலையானார். ஆனால் அவருக்கு கொரோனா தொற்று இருந்ததால் மருத்துவமனையில் இருந்து வெளியே வரவில்லை. டார். இந்த நிலையில், சசிகலாவை வரவேற்று, தமிழகத்தின் பல இடங்களில் அதிமுகவினர் போட்டி போட்டு கொண்டு போஸ்டர்களை ஒட்டி வருகின்றனர்.

ஆண்டிப்பட்டியில் அதிமுக ஒன்றிய  இளைஞரணி தலைவர் சின்னராஜா என்பவர், சசிகலாவை வரவேற்று போஸ்டர்களை ஒட்டியுள்ளார். அதில், தமிழ் நாட்டை வழிநடத்த வருகைதரும் அதிமுக கழகத்தின் பொதுச்செயலாளர், தியாகத்தின் மறு உருவம் எங்களின் ராஜமாதாவே வருக! வருக! ” என்று அச்சடிக்கப்பட்டுள்ளது. சசிகலாவை வரவேற்று போஸ்டர் ஒட்டும் அதிமுகவினர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டு வருகின்றனர்.

இதேபோன்று திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதியில் உள்ள முன்னாள் மாவட்ட ஊராட்சி துணை தலைவரும், முன்னாள் தொகுதி செயலாருமான அரசங்குடி ந.சுவாமிநாதன் என்பவர் சசிகலாவை வரவேற்று திருவெறும்பூர் பகுதி உள்பட பல இடங்களில் போஸ்டர் ஒட்டியுள்ளார். அதில், அம்மா அவர்களின் அன்பு சகோதரி, தியாக தலைவி சின்னம்மா, கழகம் காத்திட, பொதுச்செயலாளர் பணியை தொடர்ந்திட வருக வருக என்று வரவேற்கிறேன், இவ்வாறு பல இடங்களில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டு இருக்கிறது.

Exit mobile version